Saturday, October 30, 2010

செயற்கை அறிவாண்மை ( Artificial Intellligence) எந்திரனின் தொழிநுட்ப உண்மை

செயற்கை அறிவாண்மை ( Artificial Intellligence)
என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது. தற்கால தானியங்கிகள் பந்து விளையாடும், நடனம் ஆடும், வயலின் வாசிக்கும் எனினும் மனிதருக்கு இணையாக எல்லா செயற்பாடுகளும் செய்யா. இருப்பினும் எதிர்காலத்தில் மனித அறிவு ஆற்றலுக்கு இணையாக அல்லது மீவும் வண்ணம் இயந்திர அறிவாண்மை வளரக் கூடும்.


ரூறிங் பரிசோதனையின் படி மனிதனில் இருந்து ஒரு தானியங்கியை ஒரு மனிதர் வேறுபாடு கண்டறியா வண்ணம் என்று ஏற்படுகிறதோ அன்று இயந்திரங்கள் அறிவை வெளிப்படுத்துகின்றன என கருதலாம்

சிக்கல்கள்

  • பார்வை - Perception
  • பொது அறிவு - Common Sense
  • உணர்ச்சி - Emotion
  • உள்ளுணர்வு - Consciousness

இயந்திர தற்கற்றல்(Machine Learning):

இயந்திர தற்கற்றல் என்பது கணிணி படித்தீர்வு மற்றும் நிரல்களை கொண்டு உணரிகள் அல்லது தரவுத்தளம் உருவாக்கும் தரவுகளை ஆராய்ந்து , சூழ்நிலைக்கேற்ற நடத்தைகளை உருவாக்குதல் தொடர்புடைய அறிவியல் ஆகும்.
இயந்திர தற்கற்றல் என்பதின் முக்கிய நோக்கமே நுட்பமான தரவமைப்புகளிருந்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதாகும்.
மேலும் அதன் திறன் இயற்பியல் பொருள்களின் தரவுகளைக் கண்டவுடனே ஈர்த்துக்கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கும், அப்பொருள்களின் சுற்றுப்புறச் சூழ்நிலை களின் உள்ளிட நிலைமைகளுக்கேற்ப, தரவுகளை நடைமுறைப் படுத்துவதும், பல்வேறு ஊக்கிகளுக்கு ஈடு கொடுப்பதற்கேற்பவும் அமைந்திருக்கும்.

காரணமறியும் திறன்

காரணச்சிக்கல்களை கணிணி நிரல்களை கொண்டு படிமுறைத்தீர்வு காணும் திறன் செயற்கை அறிவாண்மையின் முக்கிய துணைப்பொருள் ஆகும். மனிதர்களைப் போல் உள்ளுணர்வால் முடிவுகளை இயந்திரங்கள் எடுப்பதில்லை, இயந்திரங்கள் படிப்படியாக காரண காரியத்துடன் நிரல்களைக் கொண்டு படிமுறை நிலைகளைத் தீர்மானிக்கும்.

திட்டமிடல்

அறிவு இயற்றிகள் அல்லது செயற்கை முகவர் இலக்குகளை அமைத்து, அவற்றை அடைய வேண்டும்.
செயற்கை முகவர்கள் என்பது தனித்தியங்கும் அமைப்பு ஆகும்(எ.க: கணிணிகள்,தானியங்கிகள்). • வெற்றி, தவறு, நடத்தை அடிப்படையில் தன்னைத் தானே சோதித்து கொள்ள வேண்டும். • கணிணி இணைப்பினூடாக தானாக இயங்கி பொருந்த வேண்டும்.
செயற்கை முகவர்கள் சூழ்நிலைகளுக்கேற்ப நிலைகள் மற்றும் எவற்றை செயல்படுத்தினால் வெற்றியின் நிகழ்தகவு அதிகரிக்க முடிவெடுக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு தானியங்கி சூழ்நிலைகளிருந்து உணரிகளால் சமிக்ஞைகளை பெற்று ஒரு வெளிஉலக வேலையை செய்ய இயக்கிகளையும் விசைப்பொறிகளையும் இயக்கும்.

Thursday, October 28, 2010

2010 இறுதியில் 2 பில்லியன் இணையப் பாவனையாளர்கள்

இவ் வருட இறுதியில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இணையப் பாவனையாளர்களாக இருப்பார்கள் என ஐக்கிய நாடுகளின் ஆய்வுறிக்கையொன்று தெரிவிக்கின்றது. 





கடந்த 5 வருடங்களில் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதாவது 2 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.

226 மில்லியன் பேர் புதிதாக இவ்வருடத்தில் இணையத்தைப் பாவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவர்களில் அநேகர் வளர்ந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

மேற்படி அறிக்கையின் படி வருட இறுதியில் மேலைத்தேய நாடுகளின் சனத்தொலையில் 71 % இணையப் பாவனையாளர்களாக இருப்பார்கள்.

மேலும் மொபைல் இணையம் மற்றும் புரோட்பேன்ட் (Broadband) ஆகியன வேகமாக வளர்ந்துவருவதாகவும் இது பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் உந்துதலாக உள்ளதாகவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

அவ்வறிக்கையினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.

DOWNLOAD THE REPORT HERE.

Saturday, October 23, 2010

கூகுள் குரோம் இணையஉலவி 7 ஆவது பதிப்பு வெளியீடு

கூகுள் குரோம் இயங்குதளத்தின்( Browser) 7 ஆவது பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வியங்கு தளமானது மெக், விண்டோஸ், லினக்ஸ் ஆகிய இயங்கு தளங்களுக்கு (Operating System) இயங்கக் கூடியதாகும்.






இது தொடர்பாக அதன் வலைப்பூவில் (Blog) அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய பதிப்பில் காணப்பட்ட நூற்றுக்கான பிழைகளைத் திருத்தியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது.

மேலும் சிறப்பாக இயங்கக் கூடிய HTML 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக குரோம் பாவனையாளர்கள் தானாக 'அப்டேட்'களைப் பெறுவதுண்டு.

கூகுளின் தரவிறக்கம் செய்யும் பக்கத்திலிருந்து அதனை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

Tuesday, October 19, 2010

முப்பரிமாண உலகில் 'டொஷிபா'வின் புதிய புரட்சி

வெறும் கண்களால் பார்க்கக்கூடிய முப்பரிமாண (3D) தொலைக்காட்சியை, ' டொஷிபா' அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக முப்பரிமாணத் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு கண்ணாடி அணிய வேண்டிய கட்டாய நிலையே இருந்து வந்தது.



தற்போது ' டொஷிபா ' அறிமுகப்படுத்தியுள்ள இத்தொலைக்காட்சிக்கு கண்ணாடி அவசியமில்லை.

இதன் ' லிக்யுட் கிரிஸ்டல்' திரையின் முன்பகுதியில் சிறிய வில்லைகளைக் கொண்ட 'சீட்' போன்றதொரு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

மேற்படி சீட்டானது திரையிலிருந்து வெளிப்படும் ஒளியை 9 புள்ளிகளுக்குச் செலுத்துகின்றது. இதனை மனித மூலை முப்பரிமாண வடிவமாக ஒருங்கிணைக்கின்றது.

இத்தொலைகாட்சியானது 12 அங்குலம் மற்றும் 20 அங்குல அளவுகளில் விரைவில் சந்தைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எனினும் குறிப்பிட்டளவு தூரத்திற்குள் தான் இதன் தன்மையை ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

20 அங்குல தொலைக்காட்சியின் எல்லை 90 சென்டி மீட்டராகவும் 12 அங்குல தொலைக்காட்சியின் எல்லை 65 சென்டி மீட்டராகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஜப்பானிய சந்தைக்கு வரவுள்ள இத்தொலைக்காட்சியானது சுமார் 1400 அமெரிக்க டொலர்வரை விலையிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Sunday, October 17, 2010

பேஸ்புக்' வழங்கும் புதிய 'குரூப்ஸ்'

பேஸ்புக் பாவனையாளர்கள் அனைவரும் அதிக அக்கறை கொள்ளும் விடயம் ' ப்ரைவசி' ஆகும். நாம் பொதுவாக விடயங்களை, தகவல்களை அல்லது புகைப்படத்தினை நமது பேஸ்புக் நண்பர்களிடையே பகிர்கின்றோம்.





எனினும் குறிப்பிட்ட சில செயற்பாடுகளைக் குறித்த சிலரிடையே மட்டும் பகிர விரும்புவதுண்டு. இவ் விடயத்தினை கருத்திற் கொண்டு புதிய ' குரூப்ஸ் ' வசதியினை பேஸ்புக் வழங்கியுள்ளது.

ஏற்கனவே பேஸ்புக்கில் இது போன்றதொரு வசதி உள்ள போதிலும் 5 % குறைவான பாவனையாளர்களே இதனை உபயோகிப்பதாகவும் ஆனால் இவ்வசதியானது பல பாவனையாளர்களால் உபயோகிக்கப்படுமெனவும் அதன் நிறுவுனர் ஸுக்கர் பேர்க் தெரிவிக்கின்றார்.

தற்போது இவ்வசதியின் மூலம் நீங்கள் விரும்பிய சிலரிடையே மட்டும், அதாவது விருப்பமான குழுவினரிடையே மட்டும் தகவல்களைப் பகிரலாம்.

இதன் மூலம் நண்பர் வட்டத்தினிடையே, குடும்ப உறுப்பினர்களிடையே தகவல் பரிமாற்றத்தினை மேற்கொள்ளமுடியும்.

மேலும் அக் குழுவினரிடையே 'சாட்டிங்' , குரூப் 'மெசேஜிங்' மற்றும் குரூப் 'மெயிலிங்' வசதிகளும் இதில் உள்ளன.

இதன் மூலம் பாதுகாப்பாக விடயங்கள் பகிரப்படுவதோடு நமது ' ப்ரைவசி' மேலும் பாதுகாக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது

Friday, October 15, 2010

ஸ்கைப் 5.0 உடன் தற்போது பேஸ்புக் ( Official version)

தற்போது ஸ்கைப்பின் விண்டோஸுக்கான புதிய 5.0 தொகுப்பில் பேஸ்புக் 'டெப் (Tab)' இணைக்கப்பட்டுள்ளது. இதனோடு் பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகள் இணைந்துள்ளன.
இனிமேல் ஸ்கைப்பில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கு நேரடியாக அழைப்பினை மேற்கொள்ளமுடிவதுடன் எஸ்.எம்.எஸ் செய்யவும் முடியும்



மேலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட்டிங் (Status updating) , கமெண்ட்ஸ்
(Comments) செய்யவும் முடியும்.

இது ஆரம்பம் மட்டுமே எனவும் சிறிது காலத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் அந்நிறுவங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கைப் 5.0 தொகுப்பினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.

Download Skype 5.0 here

ஸ்கைப் 5.0 தொடர்பான காணொளி

கணினிக்குரிய டிப்ஸ் சில


டவுண்லோட் செய்த பைல் எங்கே?

பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்திடுவோம். அல்லது எங்கே டவுண்லோட் செய்திட என்று ஒரு சிறிய விண்டோவில் கேட்கும்போது, கம்ப்யூட்டர் டைரக்டரியை பிரவுஸ் செய்து,



போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுப்போம். சில வேளைகளில், சில தளங்களில் இந்த டயலாக் பாக்ஸ் எல்லாம் கிடைக்காதபடி செய்து வைத்திருப்பார்கள். நாமும் டவுண்லோட் செய்திடுவோம். டவுண்லோட் செய்தபின் எங்கு அந்த பைல் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. பல இடங்களில் தேடி அலுத்துப் போய்விடுவோம். இது போன்ற நேரங்களில் கீழ்க்காணும்படி செயல்படவும். Tools அழுத்தி பின் கிடைக்கும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + ஜே (Ctrl+J) அழுத்தினாலும் இந்த விண்டோ கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்தால் நீங்கள் டவுண்லோட் செய்த பைல் காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Open Downloading Folder என்பதில் கிளிக் செய்தால், பைல் இருக்கும் போல்டர் காட்டப்படும்.


குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க


வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி:– மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Fonts தேர்ந்தெடுத்து அதில் Effects பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Hidden என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Ctrl+A என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Ctrl+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.


டாஸ்க் பார் / டூல் பார்

பலருக்கு அடிக்கடி சந்தேகம் வரும் இரண்டு டெக்னிக்கல் சொற்றொடர்கள். டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் கலரை மாற்றலாம். இடத்தையும் நாம் விரும்பினால் மாற்றலாம். இந்த பாரை மேற்புறமாக அல்லது இடது வலது பக்கங்களில் அமைத்துக் கொள்லலாம். இதன் இடது பக்கத்தில் தான் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நாம் இயக்கும் புரோகிராம்களின் பைல்களுக்கான பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறந்தால், அவை அனைத்தும், புரோகிராமின் குரூப் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் அமையும். எந்த பைலைக் கொண்டு திரையின் மீது கொண்டு வர விரும்புகிறீர்களோ இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.
இந்த டாஸ்க் பாரில் குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால், புரோகிராம்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம், சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் தொடங்கும்போதே இயக்கப்படும் சில புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகார நேரம் இதில் காட்டப்படும்.
டூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப்படும். நம் விருப்பப்படி புரோகிராம்களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக்கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.


உடனடி சிடி இயக்கத்தை நிறுத்த

கம்ப்யூட்டரின் டிவிடி அல்லது சிடி டிரைவில் ஒரு சிடியைப் போட்டவுடன் அது உள்ளிருக்கும் பைலுக்கேற்ப இயங்கத் தொடங்குகிறது. அல்லது என்ன செய்திட? என்று மெனு கொடுத்துக் கேட்கிறது. கம்ப்யூட்டரின் ஆட்டோ ரன் பைல் சிடியை இயக்குகிறது. இது எதற்கு? சிடி போட்டால் சிவனே என்று இருக்க வேண்டியதுதானே? நமக்கு அதில் உள்ள பைல் வேண்டும் என்றால் நாம் இயக்க மாட்டாமோ? என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கு அந்த சிடி இயங்குவது பிடிக்கவில்லையா? ட்ரேயைத் தள்ளியவுடன் அதனைப் படிக்க கம்ப்யூட்டர் முயற்சிக்கிறது அல்லவா? உடனே ஷிப்ட் கீயை அழுத்துங்கள். சிடி இயங்காது. நின்றுவிடும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அதன் டைரக்டரியில் உள்ள பைல்களை நீங்கள் கையாளலாம்.


ஷிப்ட்+எப்5 (shift+f5) என்ன நடக்கும்?

வேர்டில் நூற்றுக் கணக்கான ஷார்ட் கட் கீகள் உள்ளன. ஆனால் இவற்றில் மிக முக்கியம் என பலரும் கருதுவது ஷிப்ட் + எப்5 கீகள் இணைந்த ஷார்ட் கட் கீ தான். இதனை அழுத்துவதன் மூலம் அதற்கு முன் நாம் டாகுமெண்ட்டில் எங்கு எடிட் செய்தோமோ அந்த இடத்திற்கு கர்சர் தாவும். அடுத்ததாக பொதுவான ஒன்று. அது கண்ட்ரோல் + இஸட்(z). இது அப்போது மேற்கொண்ட செயலை நீக்கும். இதனைத் திருப்பி திருப்பி அழுத்துவதன் மூலம் நாம் மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் பின் வரிசையில் நீக்கப்படும். ஏதேனும் நீக்கிய ஒன்றை மீண்டும் வேண்டும் என்றால் கண்ட்ரோல் + ஒய்(y) அழுத்தினால் போதும்.

Tuesday, October 12, 2010

வைரசால் பாதிக்கப்பட்ட Task Manager ஐ சீர்திருத்துவது எவ்வாறு

 எனது கணிணியில் பலமுறை  வைரசால் பாதிக்கப்பட்ட போது Task Manager Disabled என்னும் பிழைச்செய்தி வந்தது. பெரும்பாலும் வைரஸ், ட்ரோஜன், மால்வேர்கள் Taskmanager ஐ disable செய்கின்றன. அதனால், நம்மால் அதன் process ஐ நிறுத்த முடிவதில்லை. அதனை மீண்டும் சரி செய்வதற்கான 5 வழிமுறைகள் கீழே தந்துள்ளேன்.



முறை  1:


  • Group Policy Editor வழியாக சரி செய்யலாம்..
  • Start,  Run , அதில் gpedit.msc என்று டைப் செய்யவும்.
  • அதில் User Configurationல் Administrative Template ஐ Expand(+) செய்யவும்
  • அதில் System ஐ Expand செய்து Ctrl+Alt+Del ஐ க்ளிக் செய்யவும்
  • அதில் Remove Task Manager என்பதனை Click செய்து அந்த Optionல் Not Configured என்பதனை தேர்வு செய்யவும்.
முறை 2:

  • Start, Run ல் கீழே உள்ள Command ஐ கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.
  • REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f  


முறை 3:
  • Notepad ல் கீழே உள்ள வரிகளை Paste செய்யவும்
  • [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
    “DisableTaskMgr”=dword:00000000
  • பின்னர் அதனை Taskmanager.reg என save செய்து அதை ஒபென் பண்ணுவதன் மூலமாக சரி செய்யலாம் 

முறை 4:

  • Start, run ல் regedit என்று Type செய்யவும்
  • அதில் HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies\ System    என்ற இடத்தில் Disable Task manager என்ற Value ஐ அழித்துவிடவும்.

முறை 5:

  • Task Manager Fix என்னும் மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும்
  • அதனை Run செய்வதன் மூலம் Task Manager ஐ Restore செய்ய முடியும்.

Monday, October 11, 2010

AVG Antivirus pro 2011 free for one year for all of us ஏவிஜி ஆன்டி வைரஸ் ஒரு வருடம் இலவசம்

மிகவும் பிரபல ஆன்டி வைரஸ் நிறுவனங்களில் ஏவிஜியும் ஒன்று. இது  தன் ஏவிஜி ஆன்டி வைரஸ் மென்பொருளை இலவசமாக ஒரு வருடத்திற்கு தருகிறது இப்பொழுது.   


ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 என்ற புதிய வெளியீடு. இந்த மென்பொருளை தரவிறக்க நீங்கள் செய்ய வேண்டியது. 

உங்கள் மின்னஞ்சல் முகவரி
மற்றும் எவ்வாறு உங்களுக்கு இந்த செய்தி தெரிய வந்தது என்ற தகவல். 
என்பவற்றை குறிப்பிட்டால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரி 2 அல்ல்து 3 நாட்களுக்குள் ஒரு வருடத்திற்கான இலவச கீ வந்து விடும்.
இன்னும் எனக்கு வரவில்லை என் பெயர் கூற விரும்பின்  tamilaaqil@gmail.com
என்ற எனது mail id யை கொடுக்கவும்
இவ்வேலைகள் யாவும்  முடித்தவுடன் மென்பொருள் தரவிறக்க ஆரம்பித்துவிடும்.



ஒரு வருடத்திற்கான ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 பெற பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரிக்கு இங்கே அழுத்துக

Sunday, October 10, 2010

ட்ரோஜன் ஹார்ஸ்கள் என்றால் என்ன? மற்றும் சில கணணி வைரஸ் பற்றி ( What is trojan horse in tamil)

ட்ரோஜன் ஹார்ஸ்கள்

தீங்கிழைக்கும் நிரலானது தனது இலக்குகளைப் பூர்த்திசெய்ய, அது இயங்குகின்ற கணினியில் பயனரால் அல்லது நிர்வாகியால் நிறுத்தப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் அதைச் செய்யக்கூடியதாக இருத்தல் கட்டாயம். முதல் இடத்தில் தீம்பொருள் நிறுவப்படுவதற்கு மறைவிடமும் உதவி செய்யலாம். தீங்கிழைக்கும் நிரலானது தீங்கற்ற அல்லது விரும்பக்கூடிய ஒன்றாக வேடமிட்டு இருக்கும்போது, பயனர்கள் அது என்ன என்பதை அறியாமல் கணினியில் நிறுவ முயற்சிக்கக்கூடும். ட்ரோஜன் ஹார்ஸ் அல்லது ட்ரோஜன் கையாளும் நுட்பம் இதுவே.



பரந்த பதத்தில், ட்ரோஜன் என்பது கேடுவிளைவிக்கும் அல்லது தீங்கிழைக்கும் ப்ளேலோடை மறைத்து வைத்துக்கொண்டு அதை இயக்கும்படி பயனரை அழைக்கின்ற எந்தவொரு நிரலும் ஆகும். பிளேலோட் ஆனது உடனடியாகவே விளைவுகளை ஏற்படுத்தலாம், இதனால் பயனரின் கோப்புகளை நீக்குதல் அல்லது மேலும் தீங்கிழைக்கும் அல்லது தேவையற்ற மென்பொருளை நிறுவுதல் போன்ற தேவையற்ற விளைவுகள் ஏற்படலாம். பரப்பிகள் என அழைக்கப்படும் ட்ரோஜன் ஹார்ஸ்கள், பயனர்களின் அக வலைப்பின்னல்களில் வார்மை உள்நுழைப்பதன் மூலம் வார்ம்கள் பரவலை பொதுவாக நிறுத்தும்.

வேவுபொருளை பரப்புவதற்கான மிகப்பொதுவான ஒரு வழி, பயனர் இணையத்திலிருந்து பதிவிறக்கும் தேவையான மென்பொருளின் ஒரு பகுதியுடன் அதை ட்ரோஜன் ஹார்ஸாக கட்டியிணைப்பதாகும். பயனர் மென்பொருளை நிறுவும்போது, அதனுடன் வேவுபொருளும் நிறுவப்படும். சட்ட ரீதியாக இதை முயற்சிக்கும் வேவுபொருள் எழுத்தாளர்கள் முடிவு-பயனர் உரிம உடன்படிக்கை ஒன்றை உள்ளடக்கலாம், இதில் வேவுபொருளின் நடத்தை குறித்து புரியாத பதங்களில் கூறப்பட்டிருக்கும், பெரும்பாலும் இதை பயனர்கள் படிக்க மாட்டார்கள் அல்லது அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

 ரூட்கிட்கள்

ஒரு கணினியில் தீங்கிழைக்கும் நிரல் நிறுவப்பட்டதும், அதைக் கண்டறிந்து, நீக்குவதைத் தவிர்க்க அது மறைக்கப்பட்டதாக இருத்தல் அவசியமாகும். மனித தாக்குதல்தாரி கணினியில் நேரடியாக ஊடுருவும்போதும் இதே உண்மையாகும். சேவையக இயக்க முறைமையை மாற்றியமைப்பதன் மூலம் இந்த மறைவிடத்தை அனுமதிக்கும் நுட்பங்கள் ரூட்கிட்கள் என அழைக்கப்படும், ஆகவே தீம்பொருளானது பயனரிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும். தீங்கிழைக்கும் செயலாக்கம் ஆனது, முறைமையின் செயலாக்கங்களின் பட்டியலில் தெரிவதை அல்லது அதன் கோப்புகள் படிக்கப்படுவதை தடுக்க ரூட்கிட்களால் முடியும். உண்மையில், Unix முறைமையில் அதன் நிர்வாகி (ரூட்) அணுகலைப் பெற்றுக்கொண்ட மனித தாக்குதல்தாரி, அந்த முறைமையில் நிறுவும் கருவிகளின் தொகுதியே ரூட்கிட் ஆகும். இன்று, இந்த பதமானது தீங்கிழைக்கும் நிரலில் மறைவிட செயல்முறைகளைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

சில தீங்கிழைக்கும் நிரல்களில் அவை அகற்றப்படுவதற்கு எதிரான நடைமுறைகள் உள்ளன, தம்மை மறைக்க அல்ல, ஆனால் தம்மை அகற்ற எடுக்கும் முயற்சிகளைத் தடுக்க. இந்த நடத்தைக்கான ஆரம்பகால எடுத்துக்காட்டு ஜெராக்ஸ் CP-V நேரபகிர்வு முறைமையைக் குழப்புகின்ற இரு நிரல்களின் கதையான ஜார்கன் ஃபைலில் பதிவுசெய்யப்பட்டது:

ஒவ்வொரு குறும்பான செய்கையும் அடுத்தது அழிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையைக் கண்டறியலாம், அதோடு சமீபத்தில் ஒரு சில மில்லிவினாடிகளில் அழிக்கப்பட்ட நிரலின் புதிய நகலைத் தொடங்கலாம். மேற்படி இரண்டையும் அழிப்பதற்கான ஒரே வழி அவை இரண்டையும் ஒரே சமயத்திலேயே (மிகவும் கடினமானது) அழிப்பதாகும் அல்லது வேண்டுமென்றே கணினியை செயலிழக்கச் செய்வதாகும்.

சில நவீன தீம்பொருள்களிலும் இதே மாதிரியான நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, இங்கு தீம்பொருளானது பலதரப்பட்ட செயலாக்கங்களைத் தொடங்கும், இவை தேவைக்கு ஏற்றபடி ஒன்று மற்றொன்றைக் கண்காணித்து மீட்டெடுக்கும்.

ஒளிவுமறைவுகள்

ஒளிவுமறைவு என்பது சாதாரண அங்கீகாரச் செயல்முறைகளை தவிர்த்துச் செல்லும் ஒரு முறையாகும். கணினியானது இணங்கச்செய்யப்பட்டதும் (மேலுள்ள முறைகளில் ஒன்றால் அல்லது வேறு ஏதேனும் வழியில்), எதிர்காலத்தில் எளிதில் அணுக அனுமதிக்கும் பொருட்டு ஒன்று அல்லது அதிக ஒளிவுமறைவுகள் நிறுவப்படக்கூடும். தாக்குதல்தாரிகள் நுழைவை அனுமதிக்க தீங்கிழைக்கும் மென்பொருளுக்கு முன்பாகவும் ஒளிவுமறைவுகள் நிறுவப்படலாம்.

வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கணினிகள் குறித்து தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக கணினி உற்பத்தியாளர்கள் ஒளிவுமறைவுகளை முன்பே நிறுவுகிறார்கள் என்று இந்த திட்டமானது அடிக்கடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது, ஆனால் இது எப்போதுமே நம்பிக்கையான விதத்தில் சரிபார்க்கப்படவில்லை. உடைப்பிகள் தற்செயலான சோதனைக்கு மறைந்துள்ளதாக இருக்க முயற்சி செய்கின்றபோதும், கணினிக்கான தொலைநிலை அணுகலை பாதுகாக்க பொதுவாக ஒளிவுமறைவுகளைப் பயன்படுத்தும். ஒளிவுமறைவுகளை நிறுவ உடைப்பிகள் ட்ரோஜன் ஹார்ஸ்கள், வார்ம்கள் அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தலாம்.

க்ரேவேர்

க்ரேவேர் என்பது ஒரு பொதுவான பதமாகும், இது சில வேளைகளில் தொல்லைதரக்கூடிய அல்லது வெறுக்கக்கூடிய விதத்தில் செயல்படும் பயன்பாடுகளுக்கான வகைப்படுத்தலாக பயன்படுத்தப்படும், மேலும் இன்னமும் தீம்பொருளைவிட குறைந்த தீவிரமாக அல்லது தொந்தரவாக உள்ளது. உங்கள் வலைப்பின்னலில் உள்ள கணினிகளின் செயற்பாட்டுக்கு கேடு விளைவிக்கவென வடிவமைக்கப்பட்ட வைரஸ்களுக்கு அப்பாற்பட்டு வேவுபொருள், விளம்பரப்பொருள், டயலர்கள், நகைச்சுவை நிரல்கள், தொலைநிலை அணுகல் கருவிகள் மற்றும் ஏதேனும் வேண்டாத கோப்புகள் மற்றும் நிரல்கள் ஆகியவற்றை க்ரேவேர் உள்ளடக்கும். இந்த பதமானது குறைந்தபட்சம் செப்டம்பர் 2004 இலிருந்து பயன்பாட்டில் உள்ளது.

வைரஸ்களாக அல்லது ட்ரோஜன் ஹார்ஸ் நிரல்களாக வகைப்படுத்தப்படாத பயன்பாடுகள் அல்லது கோப்புகளை க்ரேவேர் குறிக்கும், ஆனால் இப்போதும் உங்கள் வலைப்பின்னலில் உள்ள கணினிகளின் செயல்திறனை எதிர்மறையாக பாதித்து, உங்கள் நிறுவனத்துக்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு ஆபத்துக்களைத் உருவாக்கக்கூடியது. பாப்-அப் சாளரங்களால் பயனர்களைக் கோபப்படுத்துவது, பயனர் பழக்கங்களைப் பின்தடமறிதல் மற்றும் தேவையின்றி கணினி குறைபாடுகளை தாக்குதலுக்கு வெளிக்காட்டல் போன்ற பலவகை விரும்பத்தகாத செயல்களை க்ரேவேர் அடிக்கடி செயல்படுத்துகிறது.

  • வேவுபொருள் என்பது வலை உலாவல் பழக்கங்களை பதிவுசெய்யும் நோக்கத்துக்காக (முதன்மையாக சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக) கணினியில் கூறுகளை நிறுவும் மென்பொருளாகும். கணினி ஆன்லைனில் இருக்கும்போது, இந்தத் தகவலை வேவுபொருளானது இதன் ஆசிரியர் அல்லது ஆர்வமுள்ள பிற தரப்புகளுக்கு அனுப்புகிறது. 'இலவச பதிவிறக்கங்கள்' என அடையாளம் காணப்பட்ட உருப்படிகளுடன் வேவுபொருள் பெரும்பாலும் பதிவிறக்குகிறது, மற்றும் இதன் இருப்பை பயனருக்குக் குறிப்பிடவோ அல்லது
 கூறுகளை நிறுவுவதற்கான அனுமதியை பயனரிடம் கேட்கவோ மாட்டாது. வேவுபொருள் கூறுகள் சேகரிக்கும் தகவலில் பயனர் விசைஎழுத்துருக்கள் உள்ளடங்கலாம், இது உள்நுழைவு பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கடன் அட்டை எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் ஆபத்து இருப்பதை உணர்த்துகிறது. வேவுபொருளானது கணக்கு பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், கடன் அட்டை எண்கள் மற்றும் பிற ரகசிய தகவலைச் சேகரித்து, அவற்றை மூன்றாம் தரப்புகளிடம் கடத்துகிறது.
    • விளம்பரப்பொருள் என்பது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் Mozilla Firefox போன்ற வலை உலாவிகளில் விளம்பரப்படுத்தல் பதாகைகளைக் காட்சிப்படுத்தும் மென்பொருளாகும். தீம்பொருளாக வகைப்படுத்தப்படாதபோதும், தீம்பொருள் ஆக்கிரமிப்பாகவே பல பயனர்கள் கருதுகிறார்கள். எரிச்சலூட்டும் பாப்-அப் விளம்பரங்கள் மற்றும் வலைப்பின்னல் இணைப்பில் அல்லது முறைமை செயல்திறனில் பொதுவான தரவிறக்கம் போன்ற விரும்பத்தகாத விளைவுகளை விளம்பரப்பொருள் நிரல்கள் அடிக்கடி கணினியில் உருவாக்குகின்றன. விளம்பரப்பொருள் நிரல்கள் பொதுவாக, குறிப்பிட்ட இலவச மென்பொருளுடன் தொகுக்கப்பட்டு வேறான நிரல்களாக நிறுவப்படும். பல பயனர்கள் இலவச மென்பொருளிலுள்ள முடிவுப் பயனர் உரிம உடன்படிக்கையை (EULA) ஏற்றுக்கொள்வதன் மூலம் அசட்டையாக விளம்பரப்பொருள் நிறுவுதலை ஒப்புக்கொள்கிறார்கள். விளம்பரப்பொருளானது பெரும்பாலும் வேவுபொருள் நிரலுடன் ஒன்றன்பின் ஒன்றாகவும் நிறுவப்படும். இரு நிரல்களும் ஒவ்வொன்றும் மற்றையதின் செயல்பாடுகளை தமக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளும் - வேவுபொருள் நிரல்கள் பயனர்களின் இணைய நடத்தையை சுயவிவரத்தில் சேர்க்கின்ற வேளையில், விளம்பரப்பொருள் நிரல்கள் சேகரிக்கப்பட்ட பயனர் சுயவிவரத்துக்கு தொடர்பான இலக்கு சார்ந்த விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும்.

    Thursday, October 7, 2010

    பேஸ்புக் (Facebook) பற்றிய தற்கால நிலைமை என்ன??

    உலகிலுள்ள 14பேரில் ஒருவர் பேஸ்புக் அங்கத்தவர்களாக உள்ளனர். கடந்தவாரம் வரையில் 520மில்லியன் அங்கத்தவர்கள் மாதமொன்றுக்கு 70 ஆயிரம் கோடி நிமிடங்களை அங்கத்தவர்கள் இணையத்தளத்தில் செலவழிக்கின்றனர் 150 மில்லியன் பேர் தமது கைத்தொலைபேசிகளில் பேஸ்புக் இணைப்பைக் கொண்டுள்ளனர். ஒரு அங்கத்தவருக்கு சராசரியாக 130 நண்பர்கள் தற்போதைய நிலையில் உலகளவில் வயது வித்தியாசமின்றி மிகவேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற அன்றேல் பரவி வியாபித்துவருகின்ற வலையமைப்பு எதுவென்றால் அதற்கு பதில் பேஸ்புக் என்பதாகத்தான் இருக்க முடியும்.


    2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம்திகதி ஆரம்பிக்கப்பட்ட சமூக வலையமைப்பான பேஸ்புக் இணையத்தளத்தில் இவ்வாண்டு ஜுலை மாதத்தில் 500மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள்; அன்றேல் பயனாளர்கள் உள்ளதான தகவல் ஆச்சரியமிக்கதாகவே அமைந்திருக்கும்.

    பேஸ்புக் இணையத்தளத்தில் முதல் 100 மில்லியன் பாவனையாளர்கள் இணைந்துகொள்வதற்கு 1665நாட்கள் எடுத்தன .2008ம் ஆண்டு ஒகஸ்ற் 26ம்திகதியே 100 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கு எட்டப்பட்டது.

    அதற்குப்பின்னர் அசூர வேகத்தில் பேஸ்புக்கின் அங்கத்துவம் கூடிக்கொண்டு செல்கின்றதை நோக்கமுடியும் 100மில்லியனில் இருந்து 200மில்லியன் எண்ணிக்கையைத் தொடுவதற்கு 225நாட்களும் 300மில்லியனைத் தொடுவதற்கு 160நாட்களும் 400மில்லியன் எண்ணிக்கையை எட்டுவதற்கு 143நாட்களும் 400ல் இருந்து 500மில்லியனைத் தொடுவதற்கு 166நாட்களும் எடுத்துள்ளன.

    தினமும் லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் புதிதாக பேஸ்புக் அங்கத்தவர்களாக இணைந்துகொண்டிருப்பதன் காரணமாக ஜுலை மாத பிற்பகுதியில் 500மில்லியன்களை எட்டிய பேஸ்புக் இணையத்தளத்தின் ஒக்டோபர் ஆரம்பத்தில்  அங்கத்தவர்கள் எண்ணிக்கை 520மில்லியன்களாக அதிகரித்திருக்கின்றது.

    அமெரிக்கா கனடா மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளில் 40 வீதத்திற்கு அதிகமானவர்கள் பேஸ்புக்கின் தீவிர அங்கத்தவர்களாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. உலகளவில் பேஸ்புக் வளர்ச்சி வரைபு பேஸ்புக் இணையத்தளத்தில் அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கு சராசரியாக 130 இணைய நண்பர்கள் பேஸ்புக்கில் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உலக சனத்தொகையில் 14 பேரில் ஒருவர் தற்போது பேஸ்புக்கில் அங்கத்தவர்களாக உள்ளனர் என்ற செய்தி ஒருபக்கம் அதன் அசூர வளர்ச்சியைக் காண்பித்தாலும் மறுமுனையில் நமது சமூகத்தில் ஏற்பட்டுவருகின்ற சமூக கலாசார மாற்றத்தினையும் காண்பித்து நிற்கின்றதென்றே கூறவேண்டும் . ஓய்வின்றி மக்கள் உழைத்துக்கொண்டிருக்கின்ற பரபரப்பான உலகத்தில் நண்பர்களின் பிறந்தநாள்களை நினைவில் வைத்திருப்பது ஒருநண்பரின் இணையத் தோட்டத்திற்குள் சென்று பச்சியை விடுவது காய்கறிகளைப் பரிசளிப்பது என்பதையெல்லாம் பேஸ்புக் வந்ததன் பின்னரே சாத்தியமாகின. பிறந்தநாள் திருமணங்கள் பட்டமளிப்பு விழாக்கள் பதவியுயர்வுகள் வருடாந்த நிறைவு தினக்கொண்டாட்டங்கள் போன்ற பல தனிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் கூட சுடச்சுட பேஸ்புக் ஊடாக பரிமாறப்படுகின்றன தகவல்கள் மட்டுமன்றி புகைப்படங்களும் ஏன் பிடித்த பாடல்களும் கட்டுரைகளும் கூட பேஸ்புக்கில் பரிமாறப்படுகின்றன.

    வீடுகள் அலுவலகங்கள் பொது இடங்கள் ஏன் கைத்தொலைபேசிகளை வைத்திருப்பவர்களில் கணிசமானவர்கள் தாம் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் பேஸ்புக் இணைய வலையமைப்பில் அதிகமதிகமாக நேரத்தை செலவிட்டு வருவதனை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன .

    பேஸ்புக் இணையத்தளத்தில் அங்கத்தவர்களாக இருக்கின்றவர்கள் ஒவ்வொருமாதமும் அண்ணளவாக 700 பில்லியன் நிமிடங்களை செலவிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன .

    ஓவ்வொரு மாதமும் பேஸ்புக் அங்கத்தவர்கள் 30பில்லியனுக்கு அதிகமான புகைப்படங்கள் செய்திக் கட்டுரைகள் இணையத்தளங்களுக்கான தொடர்புக் குறிகாட்டிகள் போன்றவற்றை பேஸ்புக் இணையத்தளத்தினூடாக பகிர்ந்துகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

    பேஸ்புக் என்பது ஒரு தனிநாடாக கருதப்படுமானால் அது சீனாவிற்கு இந்தியாவிற்கு அடுத்து அதிக சனத்தொகை கொண்டநாடாக இருக்கும் அத்தோடு பேஸ்புக் 70 உத்தியோகபூர்வ மொழிகளில் உள்ளமையால் அதன் பல்கலாசாரத்தன்மையை எந்தவொருநாட்டாலும் இலகுவில் எட்டிவிடமுடியாது இது பேஸ்புக்கின் பாரிய பரிணாமவளர்ச்சிக்கு சான்றுபகர்வதாகவும் அமைந்திருந்தது.

    உலகில் இலங்கை உட்பட 212 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக்கில் அங்கத்தவர்களாக உள்ளனர் .ஆகக்கூடுதலாக அங்கத்தவர்களைக் கொண்ட நாடாக பேஸ்புக் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்கா திகழ்கின்றது அமெரிக்காவில் 133மில்லியன் பேர் பேஸ்புக் அங்கத்தவர்களாக திகழ்கின்றனர். 260 அங்கத்தவர்களுடன் ஆகக்குறைந்த அங்கத்தவர்களைக் கொண்ட நாடாக நாரு(யேரசர) உள்ளது.

    முதல் பத்து நாடுகள்

    அமெரிக்கா - 133 மில்லியன்

    பிரித்தானியா- 28 மில்லியன்

    இந்தோனேசியா- 27 மில்லியன்

    துருக்கி- 24 மில்லியன்

    புpரான்ஸ்- 19 மில்லியன்

    இத்தாலி- 17 மில்லியன்

    பிலிபைன்ஸ் 16 மில்லியன்

    கனடா- 16 மில்லியன்

    மெக்ஸிகோ 15 மில்லியன்

    இந்தியா- 13 மில்லியன்

    இலங்கையில் பேஸ்புக்கின் தாக்கம் எப்படியுள்ளது?

    674,480 அங்கத்தவர்களுடன் இலங்கை இந்த வரிசையில் 74வது இடத்திலுள்ளது .இலங்கையின் மொத்த சனத்தொகையில் 3.14வீதமென்பதுடன் இணைய வசதியுடையவர்களில் மூன்றிலொரு பங்கு(37.97மூ) என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

    இலங்கையில் பேஸ்புக் அங்கத்தவர்களில் 435,040 பேர் ஆண்களாகவும் 228,740 பேர் பெண்களாகவும் உள்ளனர்

    அறிமுகமான ஆரம்பத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியிலேயே பிரபலமாகியிருந்த பேஸ்புக் தற்போது சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்களையும் வேகமாக கவர்ந்து அதன் வலையமைப்பில் உள்வாங்கிவருகின்றது.

    காலை எழுந்தவுடன் பத்திரிகை படிப்படி அன்றேல் தேநீர் கோப்பி அருந்துவது போன்று தற்போது காலை எழுந்ததுமே பல்துலக்காமல் பேஸ்புக் பார்க்கும் பழக்கம் ஒருசாரரிடையே ஏற்பட்டுள்ளது காலையில் மாத்திரம் என்றால் பரவாயில்லை நாள் பொழுதிலும் ஏன் பின்னிரவுவேளையிலுமே பேஸ்புக்கில் தொங்கிக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

    இலங்கையிலுள்ள பல அலுவலகங்களில் பணியாளர்கள் அதிகமதிகமான நேரத்தை பேஸ்புக்கில் செலவிடுவதனை அறியமுடிகின்றது காலையில் வேலைக்கு வந்தவுடனேயே இறைவனுக்கு வழிபாடுசெய்கின்றனரோ இல்லையோ பேஸ்புக் இணைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டே பணியை ஆரம்பிக்கின்றனர் பணியாளர்கள்; அதிகமதிகமான நேரத்தை பேஸ்புக்கில் செலவிட்டு நேரடிவீணடிப்பு செய்வதால் சில நிறுவனங்களில் பேஸ்புக் பார்ப்பதையே தடைசெய்கின்ற நிலைமையும் நேரக்கட்டுப்பாடுகளை விதிக்கின்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளதை அறியமுடிகின்றது இதே நிலைதான் உலகின் ஏனைய பல இடங்களிலும் காணப்படுகின்றது.

    பேஸ்புக் என்ற கட்டாற்றுவெள்ளத்தில் அதனை விரும்பாதவர்களும் இழுத்துச்செல்லப்படுவது தவிர்;க்க முடியாததாகிவிட்டுள்ளது பேஸ்புக் ஏற்படுத்திவிட்டுள்ள கலாசார மாற்றம் என்பது நம்மால் அதனை புறக்கணித்துவிட்டு இருந்துவிடமுடியாது என்பதையே யதார்த்த நிலை உணர்த்திநிற்கின்றது இதற்கு உதாரணமாக பேஸ்புக்கில் இணைய தனிப்பட்டரீதியில் ஒருவர் விரும்பாதவிடத்தும் தமது உறவினரின் புகைப்படத்தை பார்பதற்கோ அன்றேல் தமது நிறுவனத்தினை விளம்பர ஊக்குவிப்பிக்காகவோ இதில் இணைந்துகொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டமுடியும்.

    பேஸ்புக்கை நாம் மூன்றாம் தரப்புவிடயம் என புறக்கணத்து இருந்துவிடமுடியாது என்பதற்கு அதன் சமூகத்தில் அது ஆழமாக ஊடுருவியிருப்பதும் மற்றுமொரு முக்கிய காரணமாகும் .பெற்றோருக்கு தெரியாமலேயே அவர்கள் பிள்ளைகள் அதில் அங்கத்தவர்களாக இருக்கக்கூடும் அன்றேல் சகோதரர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அதில் அங்கத்தவர்களாக இருக்கக்கூடும் .அந்த வகையில் இதனை அறிந்துவைத்திருப்பதால் அதனால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களைக் கட்டுப்படுத்தமுடியும் உங்கள் வாழ்க்கையிலுள்ள மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் பேஸ்புக் துணைசெய்கின்றது என்பதே பேஸ்புக் இணையத்தளத்தின் விருதுவாக்காக உள்ளது ஒருகோணத்தில் பார்த்தால் இது மிகவும் உண்மை போன்றே தெரிகின்றது.

    ஆனால் பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்கள் மற்றும் தகவல்களை எடுத்துக்கொண்டு அதனை தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தும் செய்திகளையும் நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம் .

    பேஸ்புக்கின் சார்பாக குரல் கொடுப்பவர்கள் அதிலே ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விபரங்களின் இரகசியத்தன்மையை பேணிப்பாதுகாக்கின்ற வடிவமைப்புக்களைச் செய்யமுடியும் என தமது தரப்பு வாதத்தை முன்வைக்கலாம்.

    இருந்தபோதிலும் பேஸ்புக்கினால் பல அபாயங்கள் உள்ளதாகவும் அதிலே முக்கியமான கவனிக்கப்படவேண்டடிய மறைவான ஐந்து அபாயங்களை இணைய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

    அபாயங்கள்

    எமது விபரங்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன பேஸ்புக் வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் தமது இணையத்தளத்தை மீள்வடிவமைப்பிற்குட்படுத்தும் போது இரகசியத்தன்மை கட்டமைப்புக்கள் பாதுகாப்புக்குறைவான நிலைக்கு தள்ளப்படுகின்றது

    பேஸ்புக் விளம்பரங்கள் கணனி உரிமையாளர்களின் அனுமதியின்றியே கணனிகளின் மென்பொருள்களுக்கு சேதம் விளைவிக்கும் நாசகார மென்பொருட்களை தாங்கிவரக்கூடியவை

    உங்களது உண்மையான நண்பர்கள் தெரியாமலேயே உங்களை மிகவும் இக்கட்டான நிலைக்கு கொண்டுசெல்கின்றனர் வேண்டத்தகாதவர்கள் உண்மையான பெயர்களில் போலியான பேஸ்புக் பக்கங்களை உருவாக்குகின்றனர்

    பேஸ்புக்கை மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்துகின்ற நவீன ஊடகமாக பார்க்கப்படுகின்றது. குரலற்ற மக்களின் குரலாக பேஸ்புக்கை பயன்படுத்தப்படுவதை பல்வேறு செய்திகளின் போது நாம் அவதானிக்கின்றோம் .உதாரணமாக காஷ்மீர் பிரச்சனையில் பாதிக்கப்படுகின்ற மக்களின் தரப்பைச் சேர்ந்தவர்கள் பிரதான மற்றும் பாரம்பரியரிய ஊடகங்களால் மறைக்கப்படுகின்ற செய்திகளை பேஸ்புக் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்துகின்றனர்.

    மறுமுனையில் இந்திய அரசிற்கு சார்பானவர்கள் காஷ்மீர் பிரச்சனை பற்றிய தமது நிலைப்பாடுகளைத் தாங்கிய கருத்துக்களை வெளிப்படுத்துகின்றமை காணமுடியும்.

    விரும்பத்தகாத தகவல்கள் பேஸ்புக் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்தப்படுவதன் காரணமாக அதற்குள் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி தகவல்களை சேகரிப்பதான செய்திகளும் கடந்தநாட்களில் வெளியாகியிருந்தன பேஸ்புக்கிற்கு எதிரான முறைப்பாடுகள் தமது தனிப்பட்ட தகவல்களையும் புகைப்படங்களையும் அனுமதியின்றி பயன்படுத்துதல் திரிவுபடுத்துதல் தவறாக பிரசுரித்தல் ஆகியனவே பேஸ்புக்கிற்கு எதிரான உலகளாவிய முறைப்பாடுகளில் பொதுவானதாக காணப்படுகின்றது.

    இலங்கையில் கூட பேஸ்புக் குறித்து பல முறைப்பாடுகள் வெளியாகியிருப்பதை செய்திகளில் பார்த்திருக்கின்றோம் பேஸ்புக் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளில் அனேகமானவை நண்பர்களாக இருந்து பின்னர் கோபித்துக்கொண்டவர்கள் நண்பர்களாக இருந்த காலத்தில் பேஸ்புக்கில் இருந்தோ வேறு இணையத்தளங்களில் இருந்தோ தரையிறக்கம் செய்த புகைப்படங்களை திரிவுபடுத்தி ஆபாசமான முறையில் பேஸ்புக்கில் அன்றேல் வேறு இணையத்தளங்களில் பிரசுரித்துள்ளமை பற்றியதாகவே உள்ளதென இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவின் பொறுப்பதிகாரி சி ஐ பாலச்சந்திர தெரிவித்தார் .

    கருத்துவெளியிடுகையில் என இவ்வாறான ஆறு பேஸ்புக் அங்கத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எனக் குறிப்பிட்டாh.; இதனைத்தவிர போலிவிபரங்களைத் தெரிவித்து சிறுவயது பெண்களுடன் காதல்தொடர்புகளை ஏற்படுத்தி ஏமாற்றுகின்றமை போன்ற முறைப்பாடுகள் குறித்தும் கேள்விப்பட்டிருக்கின்றோம் .

    பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான சில ஆலோசனைகள்

    1 . எவரும் பார்க்கக்கூடாதென நீங்கள் எண்ணுகின்ற புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யாதீர்கள் .

    2 . நிஜவாழ்வி;ல் நண்பர்கள் வட்டாரத்தில் இல்லாதவர்களை பேஸ்புக்கில் நண்பர்களாக சேர்த்துக்கொள்ளாதீர்கள்

    3 . பேஸ்புக் இணையத்தளத்திலுள்ள பாதுகாப்பு கட்டமைப்பை பயன்படுத்தும் வகையில உங்களின் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் .நமது மூன்றாம் தரப்பினரிடம் முடியுமானவரையில் வழங்கக்கூடாது

    4 . பெற்றோர்கள் இணையத்தளத்தில் தமது பிள்ளைகளின் நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வுடன் இருப்பதுடன் தமது பார்வைக்குப்படும் இடத்திலேயே இல்லங்களில் கணனிகளை வைத்திருக்கவேண்டும்

    குறிப்பு இது ஏனைய சமூக இணையத்தளங்களுக்கும் பொருந்தும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது

    பேஸ்புக் தவிர 100ற்கு மேற்பட்ட சமூக இணையத்தளங்கள் உள்ளன .பேஸ்புக்கிற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளம் ஆரம்பத்தில் மிகவும் பிரபல்யமாக இருந்தது எனினும் 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதனை பேஸ்புக் முறியடித்தது அதற்கு பின்னர் பேஸ்புக்கின் வளர்ச்சி அபரிமிதமானது .பேஸ்புக் அளவி;ற்கு இல்லாவிட்டாலும்

    twitter, Orkut, tagged, hi5, bebo, frienster, buzz ஆகியனவும் எம்மவர்களிடையே ஒரளவிற்கு அறியப்பட்ட சமூக இணையத்தளங்களாக உள்ளன.

    இறுதியாக ஒன்றைக் கூற வேண்டுமெனில் எமது வாழ்க்கைக்கு நாமே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் ஆகவே நாம் நம்மை எப்படி நிஜவாழ்விலும் இணையத்தளங்களிலும் வெளிப்படுத்துகின்றோமே அதுவே எமக்கு சாதகமான அன்றேல் பாதகமான விளைவுகளைக்கொண்டுவருகின்றது எனவே ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றி சிந்தித்துச் செயற்படுவதன் மூலம் பாதக விளைவுகளை தவிர்த்துக்கொள்ளமுடியும் என்பதே எனது கருத்தாகும் .

    Wednesday, October 6, 2010

    உங்களுக்கு மெயில் அனுப்பியது யாரு?

    உங்களுக்கு மெயில் அனுப்புனது யாரு? எங்கிருந்து அனுப்பினார்னு கண்டு பிடிக்கனுமா?

    கீழே இருக்கிற ஸ்டெப்ஸ்-ஐ அப்படியே பண்ணுங்க.

    நீங்க ஜி-மெயில் யூசராக இருந்தால்,

    உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
    அதுல more options ல show original போங்க, (படத்தை பார்க்கவும்)




    இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
    அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க.. (படத்தை பார்க்கவும்)








    நீங்க யாஹூ-மெயில் யூசராக இருந்தால்,

    உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
    அதுல Full Headers (in Bottom of the mail) போங்க, (படத்தை பார்க்கவும்)


    இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
    அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..







    நீங்க லைவ்-மெயில் யூசராக இருந்தால்,

    உங்களுக்கு வந்த மெயில் right click ஐ பண்னுங்க,
    அதுல view message source ஐ க்ளிக் பண்ணுங்க, (படத்தை பார்க்கவும்)


    (வழக்கம் போல) இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
    அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..



    இப்போ ஐ.பி-ஐ வைத்து இடத்தையோ டொமைனையோ கண்டுபிடிக்க கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் பண்ணுங்க.



    http://remote.12dt.com/lookup.php


    http://www.geobytes.com/ipLocator.htm


    Sunday, October 3, 2010

    இலவச மெயில் அலர்ட் உங்கள் மொபைலில் - இந்தியர்களுக்கு மட்டும்

    இதற்கு முதலில் நீங்கள் way2sms.com ல் இலவச கணக்கு ஒன்றை வைத்திருக்க வேண்டும். இல்லை எனில் உடனே துவங்குங்கள்.



    பின்னர் அதில் உள்ள மெயில் ஆப்ஷனில் உங்களுக்கென ஒரு மின்னஞ்சல் ஒன்றை துவக்குங்கள்.


    பின்னர் மெயில் அலர்ட் எந்த எண்ணுக்கு வர வேண்டும் என்பதனை பதிவு செய்யுங்கள். (வாரம் ஒருமுறை இதனை re-activate செய்ய வேண்டும்).

    இனி உங்கள் மின்னஞ்சலை Forward செய்ய வேண்டும்,

    நீங்கள் யாஹூ உபயோகித்தால்,

    உங்கள் மெயிலில் options ஐ க்ளிக் செய்யவும்,
    அதில் pop&forwarding ஐ க்ளிக் செய்யவும்,

    அதில் E-Mail address என்னுமிடத்தில் உங்களின் way2sms.com ன் ஐ.டி யை கொடுத்து சேவ் செய்யவும்.

    நீங்கள் ஜீ-மெயில் யூசராக இருந்தால்,


    உங்கள் மெயிலின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று forwarding& POP IMAP டேப்-ல் forward a copy of incoming mail என்னும் இடத்தில் உங்கள் way2sms.com -ன் ஐ.டியைக் கொடுத்து சேவ் செய்யவும்.
    இனி அனைத்து மின்னஞ்சல்கள் பற்றிய அலர்ட்கள் உங்கள் மொபைலுக்கு வர ஆரம்பிக்கும்.
    உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
    Related Posts Plugin for WordPress, Blogger...