Monday, April 19, 2010

பேஸ் புக்கில் ஒசாமாவின் பெயரை நீக்கிவிட முடிவு

ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு செய்யும் நபர்கள் எந்த வகையில் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற விவரத்தை எங்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு வந்தால் அதனை முழுமையாக நீக்கிட முடிவு செய்திருக்கிறோம் என்று பேஸ் புக் நிறுவன செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ நாய்ஸ் தெரிவித்தார்.




உலக அளவில் பிரபலம் அடைந்து வரும் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதிவை நீக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்டர்நெட் உலகில் அபார வளர்ச்சி அடைந்து வரும் பேக்ஸ்புக்கில் நாள்தோறும் பலர் தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதன் மூலம், தங்களை இதில் சேர்த்துக் கொண்டவர்கள் தங்களது நண்பர்கள் வட்டாரங்களைப் பெருக்கி கொள்ளவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் பெரும் உதவியாக இருக்கிறது.

இந்நிலையில் ஒசாமா பின்லேடன் பெயரிலான பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆதரவாக சேர்ந்துள்ளனர். பலர் தங்களது மத ரீதியான கோட்பாடு மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டும் வாசகங்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

பிரின்ஸ் ஒப் முஜாகிதீன் என்றும் ஒசாமாவை வர்ணித்துள்ளனர். இவர் மலை பகுதியில்தான் பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. அல்-கொய்தா மற்றும் அல்சகாப் பயங்கரவாத அமைப்பின் கோட்பாடுகளும் இதில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆடியோ கேசட்டுகளும் இருக்கின்றன.

இதனை அறிந்த பேஸ்புக் நிறுவனம் இந்தப் பதிவை அழிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆண்ட்ரூ நாய்ஸ் இது குறித்து மேலும் கூறுகையில்,

"பேஸ்புக்கில் மக்கள் சிலர் போலியான பெயர்களைப் பதிவு செய்கின்றனர். இவர்கள் புகழ்பெற்ற அல்லது வேறு மாற்று நபர்கள் பெயரிலோ பதிவு செய்கின்றனர்.

ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு செய்யும் நபர்கள் எந்த வகையில் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற விவரத்தை எங்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

இருந்தாலும் ஒசாமா பின்லாடன் பெயரில் பதிவு வந்தால் அதனை முழுமையாக நீக்கிட முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...